Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
சென்னை மாநகராட்சி 109வது வார்டில் கில் நகர் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த எம் பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்ததாவது,
தன்னை சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு. அதில் நான் தெளிவாக உள்ளேன். மற்றவர்கள் எந்த நாளை வேண்டுமானாலும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடலாம். அது அவர்களின் விருப்பம்.
பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை , பராசக்தி படம் ஒரு கமர்சியல் படம் அவ்வளவு தான் , ஒருபடத்தை வைத்து அரசியல் narrative set பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம் , பொதுவாகவே திரைப்படங்கள் வணிகரீதியாக மட்டுமே எடுக்கப்படுபவை , அதனை அரசியல் நோக்கத்தோடு அணுகுவது தவறானது.
காங்கிரஸ் கட்சியில் பலருக்கு பலவிதமான கருத்து இருக்கலாம்.. ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளது. திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தான் காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியை தேசிய அளவில் காங்கிரஸும் தமிழகத்தில் திமுகவும் தான் தலைமை தாங்குகிறது , ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு உள்ளது , ஒரு கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என கட்சியை விரும்புவதில் என்ன தவறு உள்ளது .
தேர்தல் நெருங்குவதால் அடுத்த நான்கு மாதங்களுக்கு பிரதமர் தமிழுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். வேட்டி சட்டை தான் உடுத்துவார். இட்லி தோசை தான் சாப்பிடுவார். திருக்குறள் பற்றி பேசுவார்.
சென்னையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார்
Hindusthan Samachar / P YUVARAJ