Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் மாட்டுப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உழவுக்கு உறுதுணையாய் விவசாயப் பெருமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் திகழ்கின்ற மாடுகளுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
அவ்வகையில், இன்று தங்களது மாடுகளுடனும் மற்ற விலங்கினங்களுடனும் இத்தினத்தைக் கொண்டாடும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் “மாட்டுப் பொங்கல்” தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ