இன்று மகாராஷ்டிர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை!
மும்பை, 16 ஜனவரி (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜனவரி 16) நடைபெற இருக்கிறது. நேற்று விடியற்காலை தொடங்கி அந்தி சாயும் வரை ஓட்டு போடும் படலம் நடந்தேறிய நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்க
இன்று மகாராஷ்டிர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை!


மும்பை, 16 ஜனவரி (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜனவரி 16) நடைபெற இருக்கிறது.

நேற்று விடியற்காலை தொடங்கி அந்தி சாயும் வரை ஓட்டு போடும் படலம் நடந்தேறிய நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கின்றன.

மகாராஷ்டிர தேசத்தில் இருக்கும் 29 மாநகரங்களுக்கான ஓட்டுப்பதிவு நேற்று (ஜனவரி 15) அமைதியாக நடந்து முடிந்தது. வணிக உலகின் இதயமாக போற்றப்படும் மும்பை மாநகரத்தில் மட்டும் 227 வார்டுகளில் ஏறத்தாழ 1,700 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருக்கும் மகாயுதி கூட்டணி, அதாவது பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் அஜித் பவார் அவர்களின் தலைமையில் இயங்கும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், எதிர்க்கட்சியாக களம் இறங்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, அதாவது காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) மற்றும் சரத் பவார் அவர்களின் தலைமையில் செயல்படும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன.

நேற்று காலை ஓட்டு போடும் பணி சுறுசுறுப்பாக தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு முழுவீச்சில் நடைபெற்றது. சில இடங்களில் மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டுக்கள் பதிவாகவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

தேர்தல் நிலவரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் அவர்கள், இந்த உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

மும்பையில் 41.08% வாக்குகளும், புனேவில் 36.95% வாக்குகளும், நாக்பூரில் 41.23% வாக்குகளும், சத்ரபதி சாம்பாஜிநகரில் 43.67% வாக்குகளும், நாசிக்கில் 39.63% வாக்குகளும் பதிவாகி இருந்தன. மிகக் குறைவாக கொலாபா தொகுதியில் வெறும் 15.73% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.

வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக - சிவசேனை கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நகராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பெட்டிகள் இரவோடு இரவாக மும்பைக்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டன.

மும்பையில் மொத்தம் 23 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. சுமார் 2,299 அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர்.

காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM