Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 16 ஜனவரி (ஹி.ச.)
வருங்காலங்களில் மீண்டும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை மற்றும் தனுஷ்கோடி கடலோர பகுதியில் மீன் பிடித்தால் காரைக்கால் மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்போம் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடல் பகுதி, மற்றும் தனுஷ்கோடி கரையோர பகுதிகளில் தொடர்ந்து காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கை கடற்படை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை சிறை பிடித்து வருகிறது. எனவே இலங்கை கடல் பகுதி, தனுஷ்கோடி கரையோர பகுதியில் மீன் பிடிக்கும் காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மீனவர்கள் , புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு படகில் சென்று தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் படகையும், காரைக்கால் மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்து இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு அழைத்து வந்து காரைக்கால் அனுப்பி வைத்தனர்.
படகை பேச்சுவார்த்தைக்கு பின்னர் காரைக்கால் மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் இனிவரும் காலங்களில் காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளிலும் மீன் பிடிப்பதை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் வருங்காலங்களில் மீண்டும் படகுகளை பிடிப்போம் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN