ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.) இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான ராஜதந்திர உறவு 2004-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நீடித்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரி
ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு


புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான ராஜதந்திர உறவு 2004-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நீடித்து வருகிறது.

பல்வேறு துறைகளிலும் இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகியோர் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் ஜனவரி 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த பயணத்தின்போது, ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரையும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM