Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச)
காணும் பொங்கல் விழாவானது இன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காணும் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட நான்கு அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலை மோதி வரும் நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும், இன்று காணும் பொங்கல் என்பதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகை தர வாய்ப்புள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN