தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் பிப்ரவரி 1-ம் தேதி தைப்பூச திருவிழா !
தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.) அகத்தியர், தேரையர் போன்ற சித்தபுருஷர்கள் ஆராதித்த புண்ணிய ஸ்தலமான தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி மாதம் முதல் தேதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்று விடியற்காலை 5 மணிக்கு கோயில் கதவுகள
பிப்ரவரி 1-ந்தேதி தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா


தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.)

அகத்தியர், தேரையர் போன்ற சித்தபுருஷர்கள் ஆராதித்த புண்ணிய ஸ்தலமான தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி மாதம் முதல் தேதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

அன்று விடியற்காலை 5 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

இந்த மங்களகரமான வைபவத்தில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கணேச சிவாச்சாரியார் மற்றும் ஈஸ்வரன் சர்மா ஆகியோர் திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.

அதன் பிறகு, ஊட்டியைச் சேர்ந்த திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி இடம்பெறும்.

மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் கொண்டு வரும் பால்குடங்கள் மூலம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும். மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்பட்டு ஒளிவீசும்.

அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த மறைந்த ஆதி நாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகத்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.

காலை முதல் இரவு வரை இடைவிடாத அன்னதானம் வழங்கப்படும்.

இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார்.

Hindusthan Samachar / JANAKI RAM