சென்னையில் நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.) சென்னையில் நாளை நடக்கவிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புச் செ
சென்னையில் நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)

சென்னையில் நாளை நடக்கவிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புச் செயலாளர் ராம் மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆயத்த வேலைகளில் டெல்லியில் இருப்பதால் நாளை(19.01.2026) திங்கட்கிழமை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெறவிருந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் மாற்றியமைக்கப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM