Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
சென்னை மெரினா கடற்கரையிலிருந்து தாம்பரம் வரையிலான மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளுக்கு குளிர்ச்சி தரும் 2 ஏ.சி.மின்சார ரெயில்களின் அட்டவணையில் ஒரு புது மாற்றம் வரப்போகிறது!
இந்த அட்டவணை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தெற்கு ரெயில்வே இது குறித்து ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
தாம்பரத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (வண்டி எண்.49004) புறப்பட்டு மதியம் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM