பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஜனாதிபதி மாளிகையில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து
புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.) புதுடில்லி மாநகரின் இதயமாக திகழும் ஜனாதிபதி இல்லத்தை, ஆர்வமுள்ள பொது மக்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகையின் சர்க்யூட்-1 வழித்தடத்தில் பயணித்து, பிரதான கட்டிடத்தின் எழிலை அன
பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜனாதிபதி மாளிகையில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து


புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.)

புதுடில்லி மாநகரின் இதயமாக திகழும் ஜனாதிபதி இல்லத்தை, ஆர்வமுள்ள பொது மக்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மாளிகையின் சர்க்யூட்-1 வழித்தடத்தில் பயணித்து, பிரதான கட்டிடத்தின் எழிலை அனைவரும் சுற்றிப் பார்த்து ரசிக்கலாம்.

இந்நிலையில், தேசத்தின் பெருவிழாவான குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் கம்பீரமான ராணுவ அணிவகுப்பு நடைபெற இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 29-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவாக ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள விஜய் சௌக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கும் இசை முழக்க நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

ஆகவே, பாதுகாப்பு கருதி ஜனவரி 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஜனாதிபதி மாளிகைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM