Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 ஜனவரி (ஹி.ச.)
அறுபடை வீடுகள் இரண்டாம் அடை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக தமிழக மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றர்.
Hindusthan Samachar / GOKILA arumugam