Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச)
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உரிய சட்டம் கொண்டுவர கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான கல்வி, உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியும் முறையாக கிடைக்கவில்லை என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்
இட ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ