Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 19 ஜனவரி (ஹி.ச.)
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க சிபிஐ மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத முதல் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் கடை உரிமையாளர்கள், பொதுமக்கள், தமிழக வெற்றிக்கழக நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பணியில் இருந்த காவலர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், தமிழக வெற்றி கழக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் பயன்படுத்திய மக்கள் சந்திப்பு பிரச்சார பரப்புரை பேருந்தை கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து 8 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வரும் தடவியல் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி டெல்லியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி பல்வேறு விளக்கங்களை அளித்த நிலையில் மீண்டும் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்த நிலையில் கரூர் தான்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த மூன்று பெண் உதவி காவல் ஆய்வாளர்கள், 1 ஆண் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 9 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக தற்போது ஆஜராகி உள்ளனர்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்து உள்ளது என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam