Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
புதுப்பிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க வணிகப் பேரங்கள் மீதான நம்பிக்கைக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் புவிசார் அரசியல் குழப்பங்களால் விளைந்த முன்னெச்சரிக்கை உணர்வும் ஒருங்கே கலந்த கலவையான மனநிலையில் முதலீட்டாளர்கள் இருப்பதால், சந்தையின் போக்கு நிலையற்ற நிலையில் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பங்குச்சந்தை ஒரு ஏற்றத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிலையில், ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் மெஹுல் கோத்தாரி அவர்கள், இந்த வாரம் முதலீடு செய்ய உகந்த குறைந்த விலை பங்குகளைப் பற்றி சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூ.157-க்கு வாங்கலாம்.
இதன் இலக்கு விலை அதிகபட்சமாக ரூ.165 ஆகவும், ஸ்டாப்லாஸ் விலை ரூ. 153 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூ.114-க்கு வாங்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் இலக்கு விலை ரூ. 122 ஆகவும், ஸ்டாப்லாஸ் ரூ.110 ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூ.161-க்கு வாங்கலாம்.
இதன் இலக்கு விலை ரூ.170 ஆகவும், ஸ்டாப்லாஸ் ரூ. 156 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM