டெல்லியில் காலை 8.44 மணியளவில் ரிக்டர் 2.8 அளவில் லேசான நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்
புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.) புது டெல்லியில் இன்று மெல்லிய நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 5 கி.மீ ஆழத்தில் இந
டெல்லியில் காலை 8.44 மணியளவில் ரிக்டர்  2.8 அளவில் லேசான நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்


புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)

புது டெல்லியில் இன்று மெல்லிய நிலநடுக்கம் உணரப்பட்டது.

காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 5 கி.மீ ஆழத்தில் இந்த நடுக்கம் உருவானது. மேலும், இது 28.86 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டிருந்ததாக ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது.

இந்த நில நடுக்கத்தினால் உண்டான சேத விவரங்கள் மற்றும் இதர பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM