தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து - 60 மாணவ, மாணவிகள் காயம்!
தெலங்கானா, 02 ஜனவரி (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் பத்ராதிரி கொத்தகூடும் மாவட்டம் பலவஞ்சா நகரில் செயல்படும் தனியார் கல்லூரி பேருந்து இன்று மாணவ மாணவிகளை கல்லூரிக்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பத்ராச்சலம் கூட்டு ரோடு அருகே சென்று
விபத்து


தெலங்கானா, 02 ஜனவரி (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் பத்ராதிரி கொத்தகூடும் மாவட்டம் பலவஞ்சா நகரில் செயல்படும் தனியார் கல்லூரி பேருந்து இன்று மாணவ மாணவிகளை கல்லூரிக்கு ஏற்றி சென்று

கொண்டிருந்தது.

அந்த பேருந்து பத்ராச்சலம் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 60 மாணவ மாணவிகள் காயம் அடைந்த நிலையில் ஒரு மாணவி படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் பேருந்தில் சிக்க் கொண்ட மாணவ மாணவிகள் கண்ணாடிகளை உடைத்து

அதிலிருந்து வெளியேறினர்.

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு

பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு

செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam