Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி , 02 ஜனவரி (ஹி.ச)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடிவாரத்தில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் வார தினங்களிலும் வார இறுதி நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் இரவு முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க இன்று (ஜனவரி 02) சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இன்று காலையில், மணிமுத்தாரு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
வெள்ளப்பெருக்கு குறைந்து நீரோட்டம் சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்காப்படுவர் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b