Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 ஜனவரி (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 02), கேரள மாநிலம் நாயர் சர்வீஸ் சொசைட்டியின் (என்எஸ்எஸ்) நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான மன்னத்து பத்மநாபனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 02) கூறியிருப்பதாவது,
மன்னத்து பத்மநாபனின் பிறந்தநாளில், சமூக சேவைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த அந்த மாபெரும் ஆளுமையை ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். உண்மையான முன்னேற்றம் என்பது கண்ணியம், சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தத்தில் வேரூன்றியுள்ளது என்று நம்பிய ஒரு தொலைநோக்குப் பார்வையாளராக அவர் திகழ்ந்தார்.
சுகாதாரம், கல்வி, மகளிர் அதிகாரம் போன்ற துறைகளில் அவரது முயற்சிகள் மிகவும் ஊக்கமளிப்பவையாகும்.
அவரது இலட்சியங்கள், நீதியான, கருணையான மற்றும் நல்லிணக்கமான ஒரு சமூகத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b