விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு
விருதுநகர், 20 ஜனவரி (ஹி.ச.) விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி என்னுமிடத்தில் ஒரு நீர் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 21 அடியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசானது, இருக்கன்குடி நீர் தேக்கத்திலிருந்து இன்று தொடங்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு


விருதுநகர், 20 ஜனவரி (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி என்னுமிடத்தில் ஒரு நீர் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 21 அடியாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசானது, இருக்கன்குடி நீர் தேக்கத்திலிருந்து இன்று தொடங்கி ஏழு நாட்களுக்கு நீர் வெளியேற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் இருக்கன்குடி நீர்த்தேக்கத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டத்திலுள்ள முறைசார்ந்த கண்மாய்களான கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம் மற்றும் மேலக்கரந்தை ஆகிய கண்மாய்களை சார்ந்த அப்பகுதி மக்களின் 1274.07 ஏக்கர் நிலங்களின் விவசாய தேவைக்காக 20.01.2026 முதல் 26.01.2026 வரையிலான 7 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் 30.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இருக்கன்குடி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டத்திலுள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம் மற்றும் மேலக்கரந்தை ஆகிய முறை சார்ந்த கண்மாய்களின் 1274.07 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM