'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) விடுதலை போராட்ட வீரர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 03
'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

விடுதலை போராட்ட வீரர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செய்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 03) எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்

மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்!

இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம்.

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b