குற்றாலத்தில் குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 04 ஜனவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதிகளில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்
Courtallam Aiyappa


தென்காசி, 04 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதிகளில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு முன்னர் குற்றால அருவிகளுக்கு வருகை தந்து புனித நீராடி விட்டு சபரிமலை நோக்கி சென்று வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக சபரிமலை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் அதில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட 4 அருவிகளிலும் தற்போது ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN