பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு மரண தண்டை விதித்து நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி, 05 ஜனவரி (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயதான மகளை, 2024ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது,பாலியல் வன்கொ
பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு மரண தண்டை விதித்து நீதிமன்றம் உத்தரவு


திருநெல்வேலி, 05 ஜனவரி (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயதான மகளை, 2024ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது,பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.அதில், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கருவில் உருவான டிஎன்ஏ மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ ஒத்துப்போனது நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இன்று

(ஜனவரி 05) அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர்.

சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b