தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சாவூர், 07 ஜனவரி (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் 179-வது ஆராதனை விழாவினை முன்னிட்டு இன்று (ஜனவரி 07) ஒரு
தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தஞ்சாவூர், 07 ஜனவரி (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் 179-வது ஆராதனை விழாவினை முன்னிட்டு இன்று (ஜனவரி 07) ஒருநாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b