‘எங்கள் நித்திய நம்பிக்கையை அசைக்க முடியவில்லை’ -  சோம்நாத் கோயில் தாக்குதலை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி இன்று சோம்நாத் சுயமரியாதை விழாவைத் தொடங்கி வைத்தார். 2001-ஆம் ஆண்டு சோம்நாத் கோயிலுக்குச் சென்றபோது எடுத்த படங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், ஓராண்டு கால கொண்டாட்டங்கள் நாட்டின் நாகரிகத்தின் மீள்தன்
‘எங்கள் நித்திய நம்பிக்கையை அசைக்க முடியவில்லை’ -  சோம்நாத் கோயில் தாக்குதலை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி


புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி இன்று சோம்நாத் சுயமரியாதை விழாவைத் தொடங்கி வைத்தார்.

2001-ஆம் ஆண்டு சோம்நாத் கோயிலுக்குச் சென்றபோது எடுத்த படங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், ஓராண்டு கால கொண்டாட்டங்கள் நாட்டின் நாகரிகத்தின் மீள்தன்மைக்கு ஒரு அஞ்சலி என்று விவரித்தார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,

மிகவும் சவாலான காலங்களில் கூட, தங்கள் கொள்கைகள் மற்றும் விழுமியங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாத ‘பாரத மாதாவின் எண்ணற்ற பிள்ளைகளை’ நினைவுகூரும் ஒரு நிகழ்வுதான் சோம்நாத் சுயமரியாதை விழா.

ஜெய் சோம்நாத்! சோம்நாத் சுயமரியாதை விழா இன்று தொடங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 1026-ல், சோம்நாத் தனது முதல் தாக்குதலை எதிர்கொண்டது. 1026-ஆம் ஆண்டு தாக்குதலும், அதைத் தொடர்ந்த தாக்குதல்களும் லட்சக்கணக்கான மக்களின் நித்திய நம்பிக்கையைக் குறைக்கவோ, சோம்நாத்தை மீண்டும் மீண்டும் புனரமைத்த நாகரிக உணர்வை உடைக்கவோ முடியவில்லை.

“#SomnathSwabhimanParv என்பது பாரத மாதாவின் எண்ணற்ற பிள்ளைகளை நினைவுகூரும் ஒரு நிகழ்வாகும். அவர்கள் தங்கள் கொள்கைகள் மற்றும் விழுமியங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை. காலங்கள் எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்தாலும், அவர்களின் உறுதி அசைக்க முடியாததாக இருந்தது, மேலும் நமது விழுமியங்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உறுதியாக இருந்தது.

2001-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி சோம்நாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் சில காட்சிகளையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1951-ல் புனரமைக்கப்பட்ட சோம்நாத் கோயில் திறப்பு விழாவின் 50-வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடிய ஆண்டு அது.

1951-ல், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. சோம்நாத் கோயிலின் புனரமைப்புப் பணியில் சர்தார் படேல் மற்றும் கே.எம். முன்ஷி உள்ளிட்ட மாபெரும் ஆளுமைகளின் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

2001-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர் என்பதையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். “2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் அடல் ஜி, உள்துறை அமைச்சர் அத்வானி ஜி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். 2026 ஆம் ஆண்டில், 1951-ல் நடைபெற்ற அந்த பிரம்மாண்டமான விழாவின் 75-வது ஆண்டு நிறைவையும் நாம் கொண்டாட இருக்கிறோம்!.

என்று அவர் பதிவிட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள வேராவலில் அமைந்துள்ள சோமநாதர் கோயில், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் கே. எம். முன்ஷி போன்ற தலைவர்களின் முயற்சிகளைத் தொடர்ந்து, 1951-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற திறப்பு விழாவுடன் புனரமைக்கப்பட்டது.

சோமநாதர் சுவாபிமான் பர்வ கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி 11 அன்று சோமநாதர் கோயிலுக்குச் செல்ல உள்ளார்.

சோமநாதர் சுவாபிமான் பர்வ ஜனவரி 8 முதல் ஜனவரி 11 வரை அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாட்களில், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியம், கலாச்சாரப் பெருமை மற்றும் சமூக விழுமியங்களை எடுத்துக்காட்டும் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM