தேமுதிக மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்க்காக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 500-க்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்
கோவை, 09 ஜனவரி(ஹி.ச.) இன்று மாலை 4மணிக்கு கடலூர்யில் நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ள 500 பேர் கோவை கொடிசிய வளாகம் மைதானத்தில் காலை சிற்றுண்
Dmdk


கோவை, 09 ஜனவரி(ஹி.ச.)

இன்று மாலை 4மணிக்கு கடலூர்யில் நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ள 500 பேர் கோவை கொடிசிய வளாகம் மைதானத்தில் காலை சிற்றுண்டி உணவு சாப்பிட்டு ஆண்கள், பெண்கள் உட்பட தேமுதிக கழக நிர்வாகிகளை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை k.சந்துரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட அவை தலைவர் பொன்ராஜ், பொருளாளர் ராகவலிங்கம் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ஜனா சுலைமான்,செல்வம்,குணா, மற்றும் மாநில தொழிற்சங்க பேரவை துணைத்தலைவர் முருகராஜ் வழக்கறிஞர் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் பன்னீர்செல்வம் & அழகர் செந்தில் மற்றும் சிட்டி ராமசந்திரன், மாவட்ட நிர்வாகிகள் தேவராஜ்,பாக்ஸ் மூர்த்தி,அரவித்ந், சார்பு அணி நிர்வாகிகள் வட்டக்கழச் செயலாளர்கள் உட்பட பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சிங்கை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் எஸ் எஸ் கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் புறப்பட்டு சென்றனர்.

Hindusthan Samachar / Durai.J