Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 09 ஜனவரி (ஹி.ச.)
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுவதால் ஒரு சில பக்தர்கள் அச்சத்துடன் கடலின் நீராடி வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக ஏராளமான
பக்தர்கள் கடலில் நீராடாமல் அச்சம் அடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில்
ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் 45 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால்
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அக்னி தீர்த்தக் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது இதன் காரணமாக ராமேஸ்வரம் வருகை தந்த பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்திவிட்டு
அக்னி தீர்த்த கடலில் அச்சத்துடன் கடல் சீற்றத்தில் ஒரு சிலர் நீராடி
வருகின்றனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் கடல் சீற்றம் காரணமாக நீராட அச்சப்பட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam