Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் இன்று
(9.1.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழக மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:
வளசரவாக்கம்: விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், சுரேஷ்நகர், கைக்கான் குப்பம், வி.ஓ.சி.தெரு. பாரதிகாலனி, ஆற்காடு சாலை,கிழக்கு காமகோடிநகர், திருவள்ளுவர் தெரு, எஸ்.வி.எஸ்.நகர், சௌத்ரிநகர், இந்திராநகர், மசூதி தெரு, பெரியார்நகர், மீனாட்சியம்மன்நகர், லட்சுமிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர்: நண்பர்கள்நகர், ராஜேஸ்வரிநகர், வைத்திநகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, மலையம்பக்கம், பிள்ளையார் கோவில் தெரு, ரஹ்மத்நகர், சக்திநகர், எல்.கே.பி.நகர், வசந்தபுரி, எஸ்.பி. அவென்யு, தேவதாஸ்நகர், சுமித்ராநகர், ருக்மணிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தமிழக மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b