10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எண்கள் வெளியீடு
சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2025-26 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 9 தொடங்கி நேற்ற
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எண்கள் வெளியீடு


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2025-26 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படுகிறது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 9 தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

குறிப்பாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள பள்ளி மாணவர்களின் விவரம் மாவட்ட வாரியாக கேட்டுப்பெறப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது தேர்வெண்ணுடன் கூடிய மாணவர்களின் பெயர்ப் பட்டியல் dgeapp.tnschools.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலை பள்ளிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b