Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 16 பிப்ரவரி (ஹி.ச.)
மைக்ரோசாப்ட் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பில் கேட்ஸ் இன்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடன் ஒரு முக்கியமான ஆலோசனை செய்யவிருக்கிறார்.
அமராவதியில் இருக்கும் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. இதில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.
இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால், குப்பம் பகுதியில் கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே செயல்படுத்தி வரும் உடல்நலத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது பற்றி விவாதிக்க இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, டிஜிட்டல் முறையில் உடல்நலப் பதிவுகளை உருவாக்கும் 'சஞ்சீவனி' திட்டம் பற்றி அதிகாரிகள் விளக்கவுரை அளிக்கிறார்கள்.
மேலும், ஆந்திர அரசின் அதிநவீன நிகழ்நேர நிர்வாக அமைப்பு (RTGS) மையத்தை பில் கேட்ஸ் பார்வையிட்டு, தொழில்நுட்பத்தின் மூலமாக நிர்வாகத்தை எப்படி மேம்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவுள்ளார்.
உந்தவல்லி கிராமத்தில் விவசாயத்தில் டிரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்தும் அவர் ஆராய்ச்சி செய்கிறார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது 'ஸ்வர்ண ஆந்திரா 2047' என்ற தொலைநோக்கு திட்டத்தையும் பில் கேட்ஸிடம் எடுத்துரைக்கிறார்.
இந்த வருகையின் மூலம் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இன்னும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பில் கேட்ஸ் ஆந்திராவிற்கு வருகை தரும் மூன்றாவது முறையாகும்.
Hindusthan Samachar / JANAKI RAM