Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு காரணமாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 44 பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்க உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப்ரவரி 20-ந் தேதி முதல் ஏப்ரல் 05 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தென்னக இரயில்வே மா.போ.கழகத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து மா.போ.கழகம் வரும் 20.02.2026 முதல் 05.04.2026 வரை இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண்.E18-ல் 15 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ