Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியப் பெருங்கடல் பிரதேசங்கள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பிரதேசங்களுக்கு மேலே வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் விளைவாக இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அதன்படி, நாளைய தினமும் (சனிக்கிழமை), அதைத் தொடர்ந்த நாளிலும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களிலும் இதமான மழை பொழியக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பனியின் ஆதிக்கம் சிறிது குறையத் தொடங்கும். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் பனி முழுவதுமாக நீங்கிவிடும் என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM