பேருந்து மீது வேன் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்
பிந்த், 21 பிப்ரவரி (ஹி.ச) மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை வேகமாக வந்த பேருந்து ஒன்று குவாலியரில் இருந்து பிந்த் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7
பேருந்து மீது வேன் மீது மோதிய விபத்தில் 4  பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்


பிந்த், 21 பிப்ரவரி (ஹி.ச)

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை வேகமாக வந்த பேருந்து ஒன்று குவாலியரில் இருந்து பிந்த் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

பிந்த் மாவட்டத்திலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள கோஹத் சௌராஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிம்கா கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 719 இல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பகுதி காவல் நிலைய அதிகாரி (SHO) மணீஷ் தகத் ஹிந்துஸ்தான் சமாச்சரிடம் தெரிவித்தார்.

மேலும்,பயணிகள் இல்லாத பேருந்து வேன் மீது மோதியதில், வேனில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று அவர் கூறினார்.

காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில், குவாலியருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

வேன் விபத்தில் முற்றிலுமாக சிதைந்து, அதில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதாகக் கூறிய விபத்தை நேரில் பார்த்தவர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தவுடன் மீட்பு பணிகளிலும் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.

காவல் அதிகாரி தகத், விபத்துக்கு வேகமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.

விபத்துக்குப் பிறகு நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.

பின்னர் போலீசார் சேதமடைந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Hindusthan Samachar / vidya.b