Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 பிப்ரவரி (ஹி.ச.)
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் இருக்கின்ற மத வழிபாட்டு ஸ்தலங்கள் (கோயில்கள்), பழமையான செங்கோட்டை பக்கத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவின் பார்வையில் இவை தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் செய்வதற்கு திட்டம் போடப்பட்டு உள்ளது. கோயில்களும் மிக மோசமாக தாக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்தில் ஒரு மசூதியில் முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பழி வாங்குவதற்காக இந்த தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 12 நபர்கள் உயிரிழந்தனர்.நிறைய வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM