தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலகத் தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, தமிழே நீ வாழ்ந்திடு! இன்று உலகத் தாய்மொழிகள
தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் ஸ்டாலின்


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று உலகத் தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

தமிழே நீ வாழ்ந்திடு!

இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b