Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை பெரியமேடு NH சாலையில் நேற்று முன்தினம் இரவு 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மதுபோதையில் மளிகை கடை மற்றும் சாலை தள்ளுவண்டிக் கடைகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
நெல்சன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, தெரசா என்பவருக்கு சொந்தமான சாலையோரக் கடை மற்றும் சில கடைகள் என கட்டைகளால் அடித்து நொறுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நெல்சன் என்பவரின் அக்காவின் 15 வயது மகன் திருநங்கையாக கடந்த 1.5 வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
தற்போது 15 வயது திருநங்கை தரப்பினருக்கும், மற்றொரு திருநங்கை தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், 15 வயது திருநங்கையின் மாமனான நெல்சன் கடையை மற்றொரு தரப்பு திருநங்கைகள் நேற்று முன்தினம் இரவு தாக்கியதாகவும், பின் செல்லும் வழியில் தள்ளுவண்டி கடைகளை அடுத்து நொறுக்கி சென்றதாகவும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிசிடிவி கட்சிகளோடு பெரியமேடு காவல் நிலையத்தில் மளிகை கடை உரிமையாளரான நெல்சன் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பெரிய மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Hindusthan Samachar / P YUVARAJ