திருப்பூரில் பேருந்து இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர், 22 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து க
போராட்டம்


திருப்பூர், 22 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காலை முதல் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

ஆனால் தேனி செல்லும் பேருந்து அதிகாலை முதல் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது நான்கு மணி நேரத்திற்கு மேலாக தேனி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் பேருந்து வராததால் ஆத்திரம் அடைந்து கோவில்வழி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தேனி பேருந்துகள் உடனடியாக வர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் பேசிய போலீசார் பேருந்துகளை வரவழைத்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக கோவில் வழி பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam