முடி மாற்று செய்யும் பயிற்சியாளர்களும்கு பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.) முடி மாற்று அறுவை சிகிச்சை கண்டிபாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது இது தொடர்பாக அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது, முடி மாற்று அறுவை சிக
Hair


சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

முடி மாற்று அறுவை சிகிச்சை கண்டிபாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது,

முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மருத்துவ அவசர நிலைகளை கண்காணித்து கையாள வசதிகளை பராமரிக்க வேண்டும். அதற்கான உபகரணங்கள் இருக்க வேண்டும்.

இந்த மருத்துவ பயிற்சியாளர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் MCh DNB அல்லது தோல் மருத்துவத்தில் MD DNB பெற்றவர்களாக இருக்க வேண்டும்

அதே போல அழகியல் நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும் போதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறைகள் அவசர அறுவை சிகிச்சைகள் அல்ல இந்த சிகிச்சை முறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதிவாய்ந்த தோல் மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனங்களுக்கு போதுமான மயக்க மருத்து காப்புப்பிரதியை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதே போல அறுவை சிகிச்சை அறை பகுதிக்குள் ஒரு மயக்க மருந்து நிபுணர் இருப்பதும் தேவையான மயக்க மருந்துகள் உடனடியாக கிடைக்கும் தன்மையும் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொறு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ நிபுணர் மற்றும் ஒரு மயக்க மருந்து நிபுணர்கள் இடம் போதுமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய அனுமதிகளை பெற வேண்டும்.

அழுகு சாதன சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளுக்கு பொதுவான குறைந்தபட்ச தரநிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் ஒரு தோல் மருத்துவர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களுக்குள் உள்ள அனைத்து மருத்துவ நடைமுறைகளும் இந்திய தோல் மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய தோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட குறைந்தபட்ச நடைமுறை வழிகாட்டுதல்களின் படி அதனை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முடிமாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை மற்றும் அழகு சிகிச்சை மருத்துவமனைகள் இதனை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் புதிதாக மருத்துவமனைகளைப் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை வெளீயிட்டுள்ளது.

அதில் கூறி உள்ளதாவது

மருத்துவர்கள் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் பிசியோ தெரபிஸ்டுகள் ஆகியோரின் பதிவு எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பதாரர் படிவங்களை சமர்பிக்க வேண்டும்.

ஒற்றை ஆவணமாக பணியமர்த்தபட்டவர்களாக இருக்க வேண்டும்.

சுகாதாரத் சான்றிதழ்கள் பெற்று இருக்க வேண்டும்.

உயிர் மருத்துவக் கழிவு ஒப்பந்தம்.

தீ பாதுகாப்பு உரிமம் மற்றும் தீ பாதுகாப்பு அணைப்பான்.

உபகரணங்களின் பட்டியல்.

மாசு கட்டுபாட்டு வாரிய உரிமம்.

கட்டிட நிலைத்தன்மை .

மருந்தக உரிமம்.

இரத்த வங்கி உரிமம்.

லிப்ட் உரிமம் உள்ளிட்டவை பெற்று இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ