ஒன்று கூடுவோம், சஷ்டி பாடுவோம்,வீட்டிற்கு ஒரு தீபம் ஏற்றி சஷ்டி பாடுவோம் - நயினார் நாகேந்திரன்
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பரங்குன்றம் தீபக் தூண் விவகாரத்தில் - இன்று வீட்டிற்கு ஒரு தீபம் ஏற்றி சஷ்டி பாடுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவ
Nainar


Bw


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் தீபக் தூண் விவகாரத்தில் - இன்று வீட்டிற்கு ஒரு தீபம் ஏற்றி சஷ்டி பாடுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக. சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பெளர்ணமியன்று. மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ