அமெரிக்க அதிபர் டிரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்தவரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்
வாஷிங்டன், 23 பிப்ரவரி (ஹி.ச.) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ''மார் எலாகோ'' எஸ்டேட்டின் வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய கேன் ஆகியவற்றுடன் அத்துமீறி நுழைந
அமெரிக்க அதிபர் டிரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்தவரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்


வாஷிங்டன், 23 பிப்ரவரி (ஹி.ச.)

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான 'மார் எலாகோ' எஸ்டேட்டின் வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய கேன் ஆகியவற்றுடன் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அவரைத் தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர், ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்த அந்த நபரைச் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லியெல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உயிரிழந்த நபரின் வயது 20 முதல் 25 வரை இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அவரின் விவரங்களை உறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / JANAKI RAM