Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாளுக்குள், அதாவது மார்ச் 3ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘‘answer key challenge” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களை தேர்வாணைய இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b