சென்னை திரு.வி.க. நகரில் விளையாட்டு மைதான பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 71வது வார்டு மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள விளையாட்டு மைதான மேம்பாட்டு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை
Minister P.K. Sekarbabu laid the foundation stone


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 71வது வார்டு மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள விளையாட்டு மைதான மேம்பாட்டு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று காலை பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பி.என்.சி மில் குடியிருப்பு அருகே சாலையை மேம்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கில் உள்ள விநாயகர் திருக்கோயிலை ஆய்வு செய்த அமைச்சர், பெரம்பூர் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் முரசொலி மாறன் பூங்கா பணிகளையும், பெரம்பூரில் சென்னை மாநகராட்சி சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப பூங்கா பணிகளைகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகர மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக், திரு.வி.க. நகர் மண்டல அலுவலர் சொக்கலிங்கம், செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b