தவெக கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்க கட்டுப்பாடுகள் - தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவிப்பு
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.) தவெக தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, அக்கட்சி நிர்வாகிகள் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூற
should not participate in media debates


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

தவெக தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, அக்கட்சி நிர்வாகிகள் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.

முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b