பள்ளியில் கூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத திமுக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச) கும்பகோணம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில
Nainar


Be


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச)

கும்பகோணம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்றுக் கொடுப்பதை விடுத்து, ஆசிரியர்கள் எனும் போர்வையில் சில காமக் கொடூரர்களைத் திரியவிட்டு, சிறுமிகளின் பாதுகாப்பைப் பறிப்பது தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா? இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்று மேடையெங்கும் கோஷமிட்டு, சமூகநீதியின் காவலர்களாக நாடகமாடி விளம்பரம் வெளியிடுவதில் மட்டுமே கவனமாக இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைத் தூக்கியெறியும் திமுக அரசு தூக்கியெறியப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ