Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 28 பிப்ரவரி (ஹி.ச.)
பாட்னாவில் கர்பிகாஹியா ரயில் நிலையம் பக்கத்தில் இருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது,இதில் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்த பெண்ணின் பெயர் மால்தி தேவி. அவர் ஜக்கன்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கர்பிகாஹியாவைச் சேர்ந்தவர்.
காவல்துறை தகவலின்படி,
நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து தீயை அணைத்தார்கள். ஆனால், தேவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இது தொடர்பாக தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆராய்ச்சிசெய்ய இருக்கிறது.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM