2-வது நாளாக நேபாளம் செல்ல முடியாமல் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் - பயணிகள் கடும் எதிர்ப்பு!
பெங்களூரு, 28 பிப்ரவரி (ஹி.ச.) பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (பிப். 26) அன்று காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு உரித்தான விமானம் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டு நகர
இரண்டாவது நாளாக நேபாளம் செல்ல இயலாமல் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! - பயணிகள் எதிர்ப்பு!


பெங்களூரு, 28 பிப்ரவரி (ஹி.ச.)

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (பிப். 26) அன்று காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு உரித்தான விமானம் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டு நகரை நோக்கிப் புறப்பட்டது.

ஆனால், விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே நேபாளத்தில் தரையிறங்காமல், மீண்டும் பெங்களூருக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் குறித்து விமான நிறுவன அதிகாரிகள் எந்தவித தகவலும் அளிக்கவில்லை என்று பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, ரத்து செய்யப்பட்ட அந்த விமானத்தின் பயணம் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக நேபாளத்தில் தரையிறக்கப்படாமல் லக்னோ நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகவும், பயணிகள் பல மணி நேரம் விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, விமானத்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

அதன் பின்னர், அந்த விமானம் பெங்களூருக்குத் திரும்பியது.

பிறகு, விமான நிலையத்திற்குள் வந்த பயணிகள் அனைவரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தங்களுடைய பயணத்தை வீணடித்துவிட்டதாகக் கூறி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM