மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் பலி, 18 பேர் படுகாயம்
நாக்பூர், 01 மார்ச் (ஹி.ச.) மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட்டில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறை கண்காண
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் பலி, 18 பேர் படுகாயம்


நாக்பூர், 01 மார்ச் (ஹி.ச.)

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட்டில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் (நாக்பூர் கிராமப்புற) ஹர்ஷ் போடார் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார்.

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

நாக்பூர் கிராமப்புற காவல் அதிகார வரம்பிற்குட்பட்ட எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் வளாகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / JANAKI RAM