Enter your Email Address to subscribe to our newsletters

பாரீஸ், 01 மார்ச் (ஹி.ச.)
அமைதியான வழிமுறைகள் மூலமாகவே நீடித்த அமைதியை அடைய முடியும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய கிழக்கில் இன்று ராணுவ ரீதியாக அதிகரித்து வரும் பதட்டத்தை நான் கண்டிக்கிறேன். ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களும் அதைத் தொடர்ந்து ஈரானின் தாக்குதல்களும் சர்வதேச பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
இந்த நடவடிக்கைகள் உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகளின் சங்கிலியைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளன. உண்மையான உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் உட்பட அமைதியான வழிமுறைகள் மூலம் மட்டுமே நீடித்த அமைதியை அடைய முடியும்.
ஐ.நா.வின் சாசனம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான அடித்தளத்தை வழங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM