Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் அரசாணை 131 ன் அடிப்படையில் செவிலியர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், கலந்தாய்வு மூலமாக அல்லாமல் முறைகேடான வழியில் பணியிடை மாறுதல் பெற்றுள்ள செவிலியர்களின் பணியிடமாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தர கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட அனைத்து நிரந்தர செவிலியர் பணியிடங்களையும் காலிப் பணியிடங்களாக அறிவித்து பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலமாக அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசாணை 131 ன் அடிப்படையில் செவிலியர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், கலந்தாய்வு மூலமாக அல்லாமல் முறைகேடான வழியில் பணியிடை மாறுதல் பெற்றுள்ள செவிலியர்களின் பணியிடமாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தர கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட அனைத்து நிரந்தர செவிலியர் பணியிடங்களையும் காலிப் பணியிடங்களாக அறிவித்து பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலமாக அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகையுடன் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam