ராணுவம் மூலம் போதைப்பொருள் கடத்தலை அழிக்க வேண்டும் - லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன், 10 மார்ச் (ஹி.ச.) அமெரிக்க தேசத்தின் புளோரிடா மாநிலத்தில் மியாமி நகரத்தில் நடந்த ''ஷீல்ட் ஆஃப் தி அமெரிக்காஸ்'' மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களை வேரறுக்க அந்தந்த நாடுகளின்
ராணுவம் மூலம் போதைப்பொருள் கடத்தலை அழிக்க வேண்டும் - லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்


வாஷிங்டன், 10 மார்ச் (ஹி.ச.)

அமெரிக்க தேசத்தின் புளோரிடா மாநிலத்தில் மியாமி நகரத்தில் நடந்த 'ஷீல்ட் ஆஃப் தி அமெரிக்காஸ்' மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களை வேரறுக்க அந்தந்த நாடுகளின் இராணுவத்தை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்தது போன்று, இராணுவ பலத்தைக் கொண்டு மட்டுமே இந்த கொடிய குழுக்களை தோற்கடிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

போதை கும்பல்களின் உற்பத்தி மையமாக மெக்சிகோ இருப்பதாக குறை கூறிய டிரம்ப், கியூபாவிலும் விரைவில் ஒரு மாறுதல் வரும் என்று எச்சரித்தார்.

ஈரான் போர்ச் சூழல்களுக்கு இடையிலும், தென் அமெரிக்காவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த மாநாட்டை டிரம்ப் தலைமையேற்று நடத்தினார்.

அர்ஜென்டினா, சிலி உட்பட 12 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கானல் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM