Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 11 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.
இதில் வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூ, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமாக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் தரப்பிலிருந்து பாரத பிரதமருக்கும், பெட்ரோலிய துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளோம். அதே நேரத்தில் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட்டு உள்ளோம். உடனடியாக தீர்வு காணுவதாக கூறியுள்ளனர்.
40 உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 20 உணவுப் பொருட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 24 மணி நேரம்தான் சிலிண்டர் பயன்பாடு இருக்கும். விறகடுப்பு, விறகு கரிகள் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஹோட்டல்களில் அரிசி சாதம், இட்லி உள்ளிட்ட உணவுகள் கிடைக்கும். தோசை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது. ஹோட்டல்கள் விடுமுறை என்ற செயல்பாட்டை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு,
தற்போது வணிக சிலிண்டர்கள் புக்கிங் செய்வதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்தாலே போன் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர்.
அரசாங்கத்தை குற்றம் கூறவில்லை, போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிக பயன்பாடு சிலிண்டர் உயர்வால் டீ, காபி உள்ளிட்டவை ஏற்கனவே விலை உயர்ந்துள்ளது.
தற்போது மீண்டும் உயர்த்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கிலோவிற்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கட்டாயம் விலைவாசி உயரும். வணிகர்கள் அதிக அளவில் வரி கட்டுகின்றனர். தற்போது ஒரு லட்சம் கோடியில் இருந்து 2 லட்சம் கோடி வரை வணிகர்கள் வரி கட்டி வருகின்றனர்.
அதேபோல் மக்கள் வீடுகளில் வெரைட்டி உணவுகளை தயார் செய்து சிலிண்டர்களை வீணாக்காமல் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் தயார் செய்ய பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும்.
ரமலான் நோன்பு, கோயில் அன்னதானங்களில் விறகு அடுப்புகளில் உணவுகளை தயார் செய்ய தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN